‘அஹம் பிரும்மாஸ்மி’

July 25th, 2011 § 13 Comments


போன நூற்றாண்டு அறுபதுகளில் ஒரு தன்னாப்பிரிக்கக்  கம்யூனிஸ்ட் எழுத்தாளர் (வெள்ளையர்)  இந்தியாவைப் பற்றி எழுதிய நூல் பார்லிமெண்டை ஒரு கலக்கு கலக்கியது. இரண்டு மூன்ற் பேர்களைத் தவிர ம்ற்றைய யாவரும் அந்த நூலைப் படிக்கவில்லை என்பது வேறு விஷ்யம். சல்மான் ருஷ்தியின்  ‘Satanic Verses” யைப் படிக்காமலேயே ரகளை செய்ய வில்லையா? அந்தத் தென்னாப்பிரிக்க எழுத்தாளர் Ronald Shegal எழுதிய ‘A crisis in India’ என்ற நூலைத் தடை செய்தார்கள்.

அவர் அப்படி என்ன எழுதிவிட்டார்?

நூல் தடை செய்வதற்கு முன்பே நான் அதை வாங்கிப் படித்திருந்தேன்.

இந்திய மக்களுக்கு அவரவர் வீடுதான் அவர்களுடைய தேசம். வீட்டுக்கு வாசல் வெளிநாடு. அவர்களுடைய குடும்பந்தான் அவர் தேசத்துப் பிரஜைகள். பக்கத்து வீட்டுக்கரன் அந்நிய தேசத்தவன். தங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வார்களேதவிர, வீட்டுக்கு வெளியேயிருக்கும் அந்நிய தேசமாகிய சுற்றுப் புறம் எவ்வளவு அசிங்கமாகக் குப்பையும் கூளமுமாக இருந்தாலும் கவலைப் பட மாட்டார்கள்.

இதற்கு அவர் தமிழ் நாட்டுக் கிராமமொன்றில்  கண்ட  காட்சியை உதாரணமாகக் காட்டியிருந்தார்.

ஒரு வீட்டில் சாப்பிட்டு விட்டு எச்சில் இலைகளை எதிர்த்த வீட்டு வாசலில் போட்டார்கள். அந்த எதிர்த்த் வீட்டுக்காரர்கள் அவர்களுடைய எச்சில் இலைகளை இவர்கள்  வீட்டு வாசலில் போட்டார்கள். Account settled. ஷெகலுக்கு என்ன ஆச்சர்யம் என்னவென்றால், இரண்டு வீட்டுக் காரர்களுக்கும் இது தப்பாகவே படவில்லை!

இதற்குக் காரணம்,  பாரம்பரியமாக வரும் இந்தியர்களுடைய  சமயத் தத்துவந்தான் என்று அவர் எழுதீயிருந்தார். அதாவது, ‘அஹம் பிரும்மாஸ்மி’ தனிப்பட்டவர்கள் தமக்குத் தாமே நாடும், individual salvation’ . சமூகத்தைப் பற்றிக் கவலையில்லை.

பௌத்தம், சநாதன மதத்தின் இந்தக் கொள்கையை எதிர்த்து, சமூகத்தைப் பேணியது பற்றி அவர் ஒன்றும் குறிப்பிடவில்லை. பக்தி இயக்கமும் இந்தத் தனிப்பட்டவர் சொர்க்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘பஜ்’ என்றால், ‘கூடு’ என்ற பொருள். ‘பஜனி’. ‘பக்தி’ என்பதின் வேர்ச்சொல் ‘பஜ்’. சமூக வழிப்பாட்டுக்காகத்தான், பக்தி இயக்கத்தின் காரணமாக, மாபெரும் கோயில்கள் உருவாயின.

ஆனால், இவை ஒரு சராசரி இந்தியனின் பாரம்பரிய அடிமனத்தை தொடாமல் போய்விட்டதோ என்ற சந்தேகமும் நியாயமானதுதான்.இல்லா விட்டால், ரொனால்ட் ஷெகல் கூறுவது போல், சுற்றுபுற சுகாதாரத்தைப் பற்றி அவன் ஏன் கவலைப் படுவதேயில்லை?

தில்லியில் இப்பொழுதும் பஞ்சாபி மத்தியத்தர குடும்பங்கள் வசிக்கும் இடங்களில், ஒரு வீட்டில் கல்யாணம் என்றால் தெருவை அடைத்துப் பந்தல் போட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடைய சௌகர்ய அசௌகர்யங்களைப் பற்றிக் கவலையே பட மாட்டார்கள். ஓலி பெருக்கிகள் அலறிக் கொண்டிருக்கும். எணெனில் உலகம் அவர்களுக்கு மட்டுந்தான்.

வாரிசு அரசியலும் இக் கொள்கையின் நீட்சிதான்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 49 other followers