இலக்கியச் சிந்தனைகள் (3)

March 21, 2014 § 2 Comments


10, 8, 400, 400, 500, 100, 18, 18, 5, 2700, 4000, 12…..

இந்த எண்களுக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்? நியாயமான கேள்வி. இதை நீங்கள் அந்தக் காலத்திலிருந்து தமிழ் இலக்கிய நூல்களைத் தொகுத்து வருகிறவர்களைக் கேட்க வேண்டும், கணித எண்கள் தமிழிலக்கியப் பாரம்பரிய மனத்தின் magnificent obsession.

விளக்குகிறேன்

மேற் குறித்தஎண்கள் ஒவ்வொரு நூலின் பெயர்.பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எண்கள்அகநானூறு,புறநானூறு,ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், பதினெண்மேல்கணக்கு நூல்கள்,ஐம்பெரும்காப்பியங்கள், முத்தொள்ளாயிரம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், பன்னிரு திருமுறைகள்…. வேறு எந்த மொழியிலாவது தமிழைப் போல், இலக்கியத்துக்கும் கணிதத்துக்கும் இவ்வாறான உறவுமுறை இருக்கிறதா என்று தெரியவில்லை.

சங்கப்பாடல்கள் மொத்தம் 2381.பாடிய புலவர்கள் 473. ஆறு பாடல்களுக்கு ஆசிரியர்கள் தெரியவில்லை. இவர்களிர் பலர் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள். இப்புலவர்களின் பெயர்கள் உண்மையான பெயர்களா என்றும் நமக்குத் தெரியாது. பாடல்கள் வாய்மொழி மரபாகவும் வந்திருக்கலாம். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் விரவியவை. பாடல்களை வகைப் படுத்தி,இவற்றச் சான்றுகளாக மனத்திற் கொண்டு, முதல், கரு,உரி என்ற அடிப்படையில் உருவான முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். தொல்காப்பியப் பொருளதிகாரத்தினின்றும் இதை அறிய முடிகின்றது. ஒரு நீண்ட இலக்கிய மரபுக்கு இலக்கணம் வகுத்து அம்மரபு மக்கள் மனத்தில், காலத்தினால் சாகாமலிருப்பதற்கு வகை செய்த ப்ருமை தொல்காப்பியத்துக்குண்டு..

இப்பாடல்களில் குறிப்பிடப்படும் பெரும்பான்மையான தலைவர்கள், குறு நில மன்னர்கள், நிலக்கிழார்கள்,மறவர்கள். போரையும் காதலையும்,வள்ளல் தன்மையையும், வாழ்க்கை ரசித்து வாழ்வதற்கே என்பதையும் வாழ்க்கையின் கோட்பாடாகக் கொண்ட ஒரு epicurean சமூகமாக இதைக் கொள்வதில் தவறில்லை. அகத்துறைப் பாடல்கள் அனத்தும் நாடகக் காட்சிகள். தமிழ் நாட்டு மன்னர்கள் மட்டுமன்றி, ஆரியர், ஆரிய மன்னன் பிரகத்தன், ஆரியவண்ணல், மோரியர் (மௌரியர்), யவனர், வடவடுகர், வடபுலத்தரசு,வடபுலமன்னர், வடவர் ஆகிய தமிழ் எல்லை கடந்த பிறரும் குறிப்பிடப்படுகின்றனர்..தமிழ் நாட்டு மறவர்கள், வடபுல மண்னருக்காகவும், போரைத் தொழிலாகக் கொண்டு ஈடுபட்டிருக்கக் கூடும். மௌரியர் விந்திய மலையைக் குடைந்து ஏற்படுத்திய பாதை வழியே, தலைவியைப் பிரிந்து வடபுலப் பாலை நிலம் சென்ற ஒரு தலவனை பரணர் அகநானூற்றில் குறிப்பிடுகிறார். அக்காலக் கட்டத்தில் பொறைத் தொழிலாகக் கொண்ட mercenaries களும் இருந்திருக்கலாம். போர்வயிற் பிரிதலும் ஒரு வகைப் பிரிவு.

இப்பாடல்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், குறுகிய எல்லைகளைக் கடந்து பரவியிருந்த ஒரு குறிப்பிட்ட காலத்திய இந்தியச் சமூகத்தைப் பிரதிபலிக்கின்றன. எல்லை விரிந்த கலாசார பாதிப்புக்களை உள்ளடக்கியிருக்கின்றன சங்கச் செய்யுட்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.

§ 2 Responses to இலக்கியச் சிந்தனைகள் (3)

  • Eva Dolecka says:

    Hallo Dear Professor. That’s me, Eva from Warsaw, your daughters friend. I used to come to your flat almost every day when you were in Poland. Please write to me on edm@poczta.onet.eu. If I had your email address I would write a long letter to you. My mother and my brother are dead. I am a married person now but i have no children. I live in a town called Zielonka near Warsaw. My phone numer is (+48) 508 258 788.
    Please write to me or phone me. Eva from Zielonka, Poland

Leave a comment

What’s this?

You are currently reading இலக்கியச் சிந்தனைகள் (3) at இந்திரா பார்த்தசாரதி.

meta